ரயில் பயணத்திற்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம்
ரயிலில் பயணம் செய்ய தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளும் இதுதவிர தனியார் கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 500க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
மேலும் மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மூலமாக வெளியூர் செல்லும் பயணிகள் அனைவரும் தற்போது தெர்மல் ஸ்கேனர் மூலமாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே ரயில் நிலையத்தினுள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வெளியூர் செல்ல ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம் என ரயில்வே அறிவித்து உள்ளது.