/* */

குமரியில் கனமழையால் பாதிப்பு: அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு

குமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக அமைச்சர்கள் குழு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

HIGHLIGHTS

குமரியில் கனமழையால் பாதிப்பு: அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு
X

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்ட அமைச்சர்கள்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி கடும் இழப்பை சந்தித்தது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் முன்னிலையில் இன்று கன மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.

செண்பகராமன்புதூர், செம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, உரிய இழப்பீடு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் உறுதி அளித்தனர்.

Updated On: 19 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...