/* */

நாகர்கோவில் திருவனந்தபுரம் மார்க்கமாக இயக்கப்படும் 4 இரயில்கள் ரத்து: தென்னக இரயில்வே

நாகர்கோவில் திருவனந்தபுரம் மார்க்கமாக இயக்கப்படும் 4 இரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக இரயில்வே அறிவித்து உள்ளது.

HIGHLIGHTS

நாகர்கோவில் திருவனந்தபுரம் மார்க்கமாக இயக்கப்படும் 4 இரயில்கள் ரத்து: தென்னக இரயில்வே
X

கன்னியாகுமரி மாவட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 72 மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் அருகே நுள்ளிவிளை பகுதியில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஆற்று நீரானது இரயில் தண்டவாளத்தை ஆக்கிரமித்தது.

மேலும் நாகர்கோவில் திருவனந்தபுரம் இடையேயான இரயில் தண்டவாளத்தில் 3 இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டது, இந்நிலையில் கனமழையால் இரயில் தண்டவாளம் பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்படாமல் உள்ளது.

இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக இயக்கப்படும் 4 இரயில்களின் சேவை இரத்து செய்யப்படுவதாக தென்னக இரயில்வே அறிவித்து உள்ளது.

அதன்படி குருவாயூர் - சென்னை விரைவு ரயில்(16128) இன்று குருவாயூர் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுவதாகவும், சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி விரைவு ரயில் (12633) நாகர்கோவிலுடன் நிறுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதே போன்று பெங்களூரு கே.எஸ்.ஆர். - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (16526) சேவை, கொல்லம் - குமரி இடையே இன்று ரத்து செய்வதாகவும் மதுரை - புனலூர் சிறப்பு ரயில்(06729) சேவை திருநெல்வேலி - புனலூர் இடையே ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

Updated On: 16 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’