குமரியில் குளம் உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்: தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள்
குமரியில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியத்தில் 3 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், சுசீந்திரம், தக்கலை உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது, இதனிடையே இன்று அதிகாலை முதல் தொடங்கிய கனமழையானது சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் சகாயநகர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள குளமானது கனமழையால் நிரம்பியதோடு உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் பெருமளவில் தண்ணீர் வெளியேறியது.
இதன் காரணமாக சகாயநகர் உள்ளிட்ட 3 கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. மேலும் கிராமங்களில் அமைந்துள்ள 120 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதனிடையே அரசும் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையில் பணம் இல்லை என கூறி பஞ்சாயத்து நிர்வாகமும் கைவிரித்ததால் பாதிப்புடன் மனவேதனை அடைந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.