/* */

மிருகங்களின் கொம்புகளாலான கைவினை பொருட்கள் பறிமுதல்; வேட்டை கும்பலுக்கு தொடர்பு

மிருகங்களின் கொம்புகளால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் தயாரிப்பில் தமிழகம் முழுவதும் பலருக்கு தொடர்பு.

HIGHLIGHTS

மிருகங்களின் கொம்புகளாலான கைவினை பொருட்கள் பறிமுதல்; வேட்டை கும்பலுக்கு தொடர்பு
X
பறிமுதல் செய்யப்பட்ட யானைத்தந்தம், ஆமை ஓடுகள், மான் கொம்புகளால் ஆன கைவினைப் பொருட்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பபுரத்தில் இரு தினங்களுக்கு முன்பு யானைத்தந்தம், ஆமை ஓடுகள், மான் கொம்புகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெங்களூருவில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். தென்காசியை சேர்ந்த ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் வனவிலங்கு வேட்டையாடும் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இச்சம்பவத்தில் தீவிர கவனம் செலுத்தும் வகையில் வனத்துறையினர் தனிப்படை அமைத்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலும் வேட்டையாடும் கும்பல்களை தேடும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Updated On: 10 Aug 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  8. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  10. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...