Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரத்தில் நாளை மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி துவக்கம்
தமிழ்நாடு பென்சிங் அசோசியேசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பென்சிங் அசோசியேஷன் சார்பில் காஞ்சிபுரத்தில் நாளை மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி நடக்கிறது.
HIGHLIGHTS
தமிழ்நாடு பென்சிங் அசோசியேசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பென்சிங் அசோசியேஷன் சார்பில், 10 மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட மாணவ–மாணவியருக்கான 'பென்சிங்' எனப்படும் வாள்வீச்சு மாநில அளவிலான போட்டி காஞ்சிபுரத்தில் நாளை துவங்கி, இரு நாட்கள் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் அன்னைஅஞ்சுகம் திருமண மண்டபத்தில் நாளை காலை 9 மணிக்கு, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., எழிலரசன், தமிழ்நாடு பென்சிங் அசோசியேசன் அடாக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.
முதல் நாளில் மாணவியருக்கான போட்டியும், மறுநாள் மாணவருக்கான போட்டியும் நடைபெறுகிறது. மொத்தம், 200 பேர் போட்டியில் பங்கேற்கின்றனர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பென்சில் அசோசியேஷன் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.