/* */

காஞ்சிபுரத்தில் சேதமடைந்த பேருந்து நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

காஞ்சி- வந்தவாசி சாலையில் பல்லவன் நகர் பேருந்து நிலைய நிழற்குடையை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் சேதமடைந்த பேருந்து நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை
X

சேதமடைந்துள்ள காஞ்சிபுரம் பல்லவன் நகர் பேருந்து நிலைய நிறுத்தம்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்த பல்லவன் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் அமைந்துள்ளது.

இப்பகுதி சுற்றியும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு தனியார் குடியிருப்பு பகுதிகள் அடுக்குமாடி குடியிருப்புகள் என முக்கியமான பகுதியாக விளங்கி வருகிறது.

இப்பகுதியில் சாலை ஓரம் அமைந்துள்ள பல்லவன் நகர் பேருந்து நிலைய நிறுத்தத்தில் கடந்த அ.தி.மு.க .ஆட்சியில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரத்தின் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது.

பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீர் செல்ல கால்வாய் சுமார் 500 மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பேருந்து நிலையத்தின் உட்புறம் திடீரென உள்வாங்கி கால்வாய் கால்வாய் கரைகள் அனைத்தும் சேகமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

அதிகாலை பள்ளி , கல்லூரி செல்லும் மாணவிகள் , தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிட்டோர் பயணிகள் யாரும் அந்த நிழற்குடையில் நிற்கவோ, அதன் அருகில் செல்லவோ அச்சப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி உடனடியாக இந்த பேருந்து நிலையத்தில் உணவை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Updated On: 16 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!