இரண்டாம் கட்ட தேர்தலுக்கான காவல் கண்காணிப்பு குழு வாகனங்கள் தயார்
காஞ்சிபுரத்தில் 2ம் கட்ட தேர்தலூக்கான காவல் கண்காணிப்பு குழு வாகனங்கள் கலெக்டர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று மூன்று ஒன்றியங்களில் நடைபெற்றது.
இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது.
தேர்தல் நடைபெறும் நேரங்களில் சட்டம் ஒழுங்கு கண்காணிக்க சிறப்பு நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 16 நிலை கண்காணிப்புக்குழு வாகனங்களும், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 11 நிலை கண்காணிப்பு குழு வாகனங்களும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் எல்லை பொருத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்திலும் , சென்னை மாநகர காவல் எல்லைப் பகுதிக்கு அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.