பெரிய காஞ்சிபுரத்தில் சாலையோர மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவில் பசு சிக்கி பரிதாப பலி
பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சாலையோரம் மின் கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி பசுமாடு ஒன்று இறந்தது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் அருகே உள்ளது சாலைத் தெரு. இப்பகுதியினை சுற்றி ஏராளமானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலையில் மாடுகளை அவிழ்த்து விடும் நிலையில் சாலையோர உணவுகள், பழகழிவுகளை சாப்பிட்டு சாலைகளில் சுற்றி வரும் நிலையில் அவ்வப்போது சாலை விபத்துகள் நடைபெறுவது வழக்கம்.
மேலும் வீடுகளில் வழங்கப்படும் கழிவுநீர் , உணவுகளை வாங்க செல்லும் போது ஒரு வீட்டில் உள்ள பெண்மணியால் விரட்டும் போது சாலையோரம் உள்ள மின்கம்பத்திலுள்ள மின் ஓயரில் மின்கசிவில் சிக்கி உயிர்க்கு போராடும் காட்சி சிசிடிவி கேமிராவில் பதிவாகி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோர மின் கம்பங்களிலுள்ள தெரு விளக்கு எரிய பயன்படுத்தும் சிவிட்ச் பழுது காரணமாவே இச்சம்பவம் நடைபெற்றது.
மின்வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பசுமாடு உயிரிழந்துள்ளது.. தற்போது மழை காலம் என்பதால் மேலும் அசம்பாவிதங்களை தடுக்க அனைத்து தெருவிளக்கு மின் கமபங்களையும் மின்சாரவரியம் மற்றும் நகராட்சியினர் பரிசோதனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.