/* */

வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கக்கோரி நரிக்குறவர், குருவிக்காரர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கக்கோரி நரிக்குறவர், குருவிக்காரர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கக்கோரி நரிக்குறவர், குருவிக்காரர் ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் சமூக சமத்துவ படை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நிறுவன தலைவர் ப.சிவகாமி ஐஏஎஸ்.

சமூக சமத்துவ படை கட்சி காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் நரிக்குறவர் குருவிக்காரர் பழங்குடி மக்களுக்கான சலுகைகளை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

மாவட்ட அவைத் தலைவர் பழனி தலைமை தாங்கினார். சமத்துவ படை நிறுவனத் தலைவர் ப. சிவகாமி ஐ ஏஎஸ், மாநில பொதுச் செயலாளர்கள் தங்க மோகன் ராஜ், மகாராஜன் மாநில செயலாளர் மாசிலாமணி, மாவட்ட தலைவர் தாமஸ் தமிழமுதன், மாவட்ட செயலாளர் தாங்கி லோகு மற்றும் நிர்வாகிகள் பெருமாள் குமாரசாமி, சத்யா, வள்ளியம்மாள் உள்ளிட்ட நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பழங்குடியினர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நரிக்குறவர் குருவிக்காரர் சமூகங்களின் கல்வி உதவித்தொகை, தேசிய ஆய்வு உதவித் தொகை, உயர்தர கல்வி, கல்வி உதவித்தொகை , தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர் இளம் பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முடிவில் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Updated On: 26 Sep 2022 11:15 AM GMT

Related News