Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல்: அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வழக்கறிஞர் பிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
HIGHLIGHTS
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு வரும் பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. நேற்றுவரை 34 நபர்கள் மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. 32வது வார்டு பகுதி உறுப்பினர் பதவிக்கு அமமுக சார்பில் வழக்கறிஞர் பிரகாஷ் இன்று தனது கட்சி ஆதரவாளர்களுடன் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிகழ்வில் மகளிரணி செயலாளர் வரலட்சுமி உடன் இருந்தனர்.