/* */

அதிமுக வேட்பாளர்களை கடுப்பேற்றிய தேர்தல் அலுவலர்கள்

காஞ்சிபுரம் ஊராட்சி தேர்தலில் வெற்றி குறித்த அறிவிப்பு, வாக்குகள் எண்ணுதல் உள்ளிட்டவைகளில் அதிமுகவினரை வெறுப்பேற்றிய தேர்தல் அதிகாரிகள்

HIGHLIGHTS

அதிமுக வேட்பாளர்களை கடுப்பேற்றிய தேர்தல் அலுவலர்கள்
X

அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டபோது 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு நேற்று காலை வாக்கு எண்ணிக்கை பணி 7 மணிக்கு தொடங்கியது.

ஆரம்பம் முதலே திமுகவினர் 95 சதவீத இடங்களில் முன்னணியில் இருந்தனர். சில இடங்களில் அதிமுகவினர் முன்னிலையில் இருந்து வந்த நிலையில் பல்வேறு சிக்கல்கள் அலுவலர்களால் அதிமுகவினருக்கு ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு சின்னங்கள் தவறுதலாக முத்திரை பதிவு உள்ளிட்டவைகளுக்கு முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் , ஏதாவது ஒரு வகையில் அவர்களை டென்ஷனுடன் வைத்திருந்தனர்.

திருப்புக்குழி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக பெண் வேட்பாளர் 163 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றும், மூன்று மணி நேரமாக அவருக்கு சான்றிதழ் தயாரித்து வந்தனர். அதன் பிறகு அவர் கூச்சல் குழப்பம் இட்ட பின் அவருடன் போட்டியிட்ட வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தார் இதனால் 20 நிமிடம் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அதன் பின் ஒருவழியாக சமாதானம் ஏற்பட்டு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல் களக்காட்டூர் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் மனைவி சசிகலா கிராம வாக்குச்சாவடி பெட்டிகளில் எண்ணும்போது, அதிமுக வேட்பாளரின் முகவர் ஆட்சேபணை தெரிவித்தும், அலட்சியமாக செயல்பட்ட தேர்தல் அலுவலர்களால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இன்று பல சம்பவங்களில் அதிமுகவினரை வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் அலுவலர்கள் கதறவிட்ட சம்பவங்கள் அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. .இதேபோல் பாமகவினர் வெற்றி பெற்ற சான்றிதழ் வழங்குவதிலும் கடும் சிரமம் ஏற்பட்டு முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நேற்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது

Updated On: 13 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?