/* */

காஞ்சிபுரம் கழிவுநீர் கால்வாய் உடைப்பால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம் மாமல்லன் நகர் கேடிஎஸ் மணி தெரு வில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் கழிவுநீர் கால்வாய் உடைப்பால்  விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
X

காஞ்சிபுரம் வட்டம், மாமல்லன் நகர் பகுதி அமைந்துள்ளது. இதன் பிரதான தெருவாக இருப்பது கேடிஎஸ் மணி தெரு, இது நகராட்சி நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

இதன் மற்றொரு பகுதி கோனரிகுப்பம் ஊராட்சி கட்டுபாட்டில் உள்ளது. இப்பகுதியை சுற்றி சுமார் 1,000 குடும்பத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இவ்சாலை வழிதான் நகரை இணைக்கும் பிரதான சாலையாகவும் , நகராட்சி குப்பை கொட்டும் லாரிகள், கழிவுநீர், குடிநீர் லாரி அனைத்தும் செல்கின்றன .


இந்நிலையில் பாரளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாய் கல்வெட்டு சுமார் ஒரு வார காலத்திற்கு முன்பு சாலை நடுவில் ஓட்டை விழுந்து பழுதடைந்துள்ளது.

இது தொடர்பாக புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் இதுவரையில் எந்த ஓரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு வயதான முதியவர் பழுதடைந்துள்ள அந்த சாலையில் கால் தவறி விழுந்து விபத்துக்குள்ளானர்.

நேற்று இரவு பெய்த கனமழை மால் சாலையில் நீர்தேங்கியதில் சாலை பழுது தெரியாததால் அதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் விழுந்து விபத்தில் சிக்கினார்.

தற்பொழுது மக்கள் அனைவரும் பழுதடைந்துள்ள சாலையின் இருபுறங்களிலும் இரண்டு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.

எந்த நேரத்திலும் முழுவதுமாக உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதில் சிக்கமால் இருக்க குப்பை தொட்டியினை பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கைக்காக வைத்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் நலன் கருதி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 27 Aug 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!