காஞ்சிபுரத்தில் 150 மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிள் வினியோகம்
காஞ்சிபுரம் மாநகராட்சியின் கீழ் இயங்கும் சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டிகளை எம்.எல்.ஏ. வழங்கினார்.
HIGHLIGHTS
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ , மாணவிகளுக்கு 14 வகையான பள்ளிக்கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தொலைதூர பள்ளி மாணவர்கள் தடையில்லா கல்வி கற்கும் வகையில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இலவச மிதி வண்டிகளை அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சியின் கீழ் இயங்கும் டாக்டர் பி எஸ் சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு இன்று இலவச மிதிவண்டிகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி .வி. எம் .பி ஏழிலரசன் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் வழங்கினர்
பள்ளியில் நடைபெற்ற விழாவில் பேசிய போது, நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வுகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வழங்கி வருகிறது.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் தங்களை உயர்த்தியும் தனது குடும்பத்திற்கு நற்பெயரையும் தரும் அளவில் ஒழுக்கத்துடன் கல்வி பயில வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் கணேசன், தி.மு.க. நிர்வாகி மாமல்லன் , தலைமையாசிரியர் , பள்ளி ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.