Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரத்தில் இன்று 90 பேருக்கு கொரோனா தொற்று
காஞ்சிபுரம் பெருநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று புதிதாக 90 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மொத்தம் 443 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து இன்று 327 நபர்கள் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 2911 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இன்று மட்டும் ஆறு நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காஞ்சிபுரம் பெருநகராட்சியில் மட்டும் 72 நபர்களும் , ஏனைய பிற பகுதிகளில் 18 நபர்கள் என 90 பேர் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அதில் கூறப்பட்டுள்ளது.