/* */

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மீது புகார்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை கேட்கும் நாள் கூட்டத்தில் திட்ட இயக்குனர் மீது புகார் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மீது புகார்
X

ஊரக வளர்ச்சி திட்டத்தின் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக திட்ட இயக்குனர் மீது பபல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம்  புகார் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார் மீது மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் புகார் மனு அளித்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

திட்ட இயக்குனர் செல்வகுமார்.

அவ்வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, திட்ட இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்டோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய துறைகளுக்கு பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி , மக்கள் மன்றம் உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் புகார் மனு ஒன்று அளித்தனர்.

அம்மனுவினை பார்வையிட்ட ஆட்சியர் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தார். மாவட்ட திட்ட இயக்குனர் அருகில் அமர்ந்திருக்க அவர் மீது அளித்த புகார் குறித்து புகார் தெரிவித்தவரிடம் விளக்கம் கேட்டார்.

அம்மனுவில் , மணல்மேடு கூரம் ஊராட்சிகளில் பழங்குடி இன மக்களின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டுமானங்களை பாதியிலே நிறுத்திவிட்டு முழு பணத்தையும் பெற்று உள்ளனர். கருக்குப்பேட்டையில் இருளர் இன மக்களுக்கு கட்டித் தரப்பட்ட வீடுகளில் நீர் உறிஞ்சும் தொட்டி கட்டாமலேயே கட்டியதாக ரூபாய் 12500 எடுத்துள்ளனர்

இதே போல் 2016 - 17 கிராமத்தில் இருளர் மக்களுக்கு கட்டப்பட்ட வீடு தற்போது மோசமான நிலையை எட்டியுள்ளது இதற்கு தரமற்ற பணிகளே காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேற்கண்ட புகார்கள் மீது மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மனுவில் குற்றம் சாட்டிய போது மாவட்ட ஆட்சியரின் அருகில் திட்ட இயக்குனர் செல்வகுமார் அமர்ந்திருந்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 May 2023 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!