Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரத்தில் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு வாகன ஊர்வலம்
காஞ்சிபுரத்தில் பெண்கள் மற்றும் இளம் வளர் பருவ பள்ளி மாணவிகளுக்கு சத்தான உணவுகள் குறித்த விழிப்புணர்வு வாகன ஊர்வலம் நடந்தது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலைமையை மேம்படுத்தும் வகையில் வருடம் தோறும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ரத்த சோகை அதிகமாக உள்ளதால் இதுகுறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தும்படி அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டது.
அதன்படி விழிப்புணர்வு வாகனம் மூலம் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு தெருக்கூத்து மற்றும் மாணவ மாணவிகளுக்கு வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு இதற்கான வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட முழுவதும் உள்ள ஐந்து தாலுகாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.