Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் 49 வார்டு : அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு பேரணி
காஞ்சிபுரம் 49 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜீவானந்தத்துக்கு ஆதரவாக ஏராளமான அதிமுகவினர் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாக்காளர் அதிகளவில் இருக்கும் நிலையில் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சையினர் ஈடுபட்டு வருகின்றனர்..
அவ்வகையில் 49 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜீவானந்தம் தனது தொண்டர்கள் 700 பேருடன் தேர்தல் பொறுப்பாளர் கோகுல இந்திரா , மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் , அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு ஆகியோருடன் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.