Begin typing your search above and press return to search.
மானியத்தில் அத்தியாவசியப் பொருட்கள்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு
அத்தியாவசியப் பொருட்கள் அரசு மானிய விலையில் பெற சமூக தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சமூகத் தொண்டு நிறுவனங்கள் அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் அரசு மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சமூக தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வரும் உண்டு உறைவிடப் பள்ளிகள்/பள்ளி விடுதிகள்/சமூக சேவை தங்கும் விடுதிகள் போன்ற அமைப்புகளுக்கு அரிசி, சர்க்கரை ,கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் அரசு மான்ய விலையில் மொத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இதன்கீழ், இதுவரை பயன் பெறாத நிறுவனங்கள் சமூக வளையத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட விபரங்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.