Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சி வட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிர்கள் சேதம்
கள்ளக்குறிச்சி வட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 8,000 ஏக்கர் பருத்தி பயிர்கள் சேதமடைந்தது.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட குதிரைச்சந்தல் உள்ளிட்ட பகுதிகளில் 8,000 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் வீரிய ஒட்டு ரக பருத்தி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆறு மாத கால பயிரான பருத்தி விதைகளை ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் மதிப்பில் தனியார் நிறுவனங்கள் மூலமாக பெற்று, ஆகஸ்ட் முதல் வாரத்தில் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.
இப்பகுதியில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பருத்தி பூக்கள் அழுகி சேதமடைந்து, விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், பாதிப்படைந்த பருத்தி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.எனவே, பாதிக்கப்பட்ட பருத்திக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.