கள்ளக்குறிச்சி: கோமுகி அணையிலிருந்து 6,700 கன அடி நீர் வெளியேற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கோமுகி அணையிலிருந்து நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 700 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கோமுகி அணை.
கடந்த சில தினங்களாக கோமுகி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கல்வராயன் மலையில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று கோமுகி அணை பகுதியில் 13.2 செ.மீ., மழை பதிவாகியது. இதனால் பொட்டியம், கல்படை, மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளளவான 46 அடியில் (560 மில்லியன் கன அடி தற்போது 44 அடி (489.56 மில்லியன் கன அடி) நீர் நிரம்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி கோமுகி ஆறு வழியாக வரத்து நீர் முழுவதும் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் வினாடிக்கு 6 ஆயிரத்து 700 ம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் கோமுகி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்