பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
X

கோபி குள்ளம்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

இரண்டு நாட்களாக நடந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ.

இரண்டு நாட்களாக நடந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், குப்பம் பாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ இன்று (பிப்.12) மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, நான் கோவை மாவட்டம் போரூரில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று இருந்தேன். வேறு எங்கும் செல்லவில்லை. நான் எந்த ஆலோசனைக் கூட்டத்திலும் ஈடுபடவில்லை.

யாரையும் ஆலோசனைக்கு அழைக்கவில்லை. எனது வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் என்னை வந்து சந்தித்து பேசுவது வழக்கம் தான். நாளை அந்தியூரில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்காக அந்தியூரை சேர்ந்த நிர்வாகிகள் எனது வீட்டுக்கு திரண்டு வந்துள்ளனர். மற்றபடி வேறு ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் கூறினார். கோவிலுக்கு சென்றதற்கு ஆதாரமாக பிரசாத தட்டை நிருபர்களிடம் காண்பித்து, எல்லோருக்கும் பிரசாதை எடுத்து கொள்ளுங்கள் என்றார்.

பின்னர் அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து பேசி விட்டு அவர் வீட்டில் இருந்து கிளம்பி சென்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பரபரப்பு விவாதத்திற்கு செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Tags

Next Story
Similar Posts
வள்ளலார் நினைவு தினத்தில் பவானியில் களைகட்டிய மது விற்பனை : 500 மதுபாட்டில் பறிமுதல்!
சென்னிமலை அருகே மதுபோதையில்  தூக்கிட்டு வாலிபர் தற்கொலை
பவானியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்
ஈரோடு ஜவுளிச் சந்தையில் விற்பனை மந்தம்!
பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
ரூ.5 கோடி செலவில் கட்டிய சேமிப்புக் கிடங்குகள் பயன்பாடு இல்லாமல் வீண்!
நம்பியூர் அருகே மனுநீதி நாள் முகாமில் 86 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
கம்பியால் தாக்கி காவலாளியை கொன்ற தொழிலாளி கைது!
தேர்தல் முடிவுடன் ஈரோடு மாவட்ட போலீசாரின் தேர்தல் பிரிவு கலைக்கப்பட்டது
30 ஆண்டுகளாக மக்களின் தாகத்தை தீர்க்கும் தன்னார்வலர்கள் – சிவன்மலையில் அதிரடி சேவை
தைப்பூசத்தை ஒட்டி நிலாச்சோறு..!விடிய விடிய கும்மியடித்து, பாடல்கள் பாடி மகிழ்ந்த பெண்கள்
கழுதைப்பால் 600 ரூபாய்க்கு! ஆத்தூரில் அதிரடி விற்பனை
கோபி அருகே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு