பவானியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்

பவானியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்
X

 பவானியில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் பவானியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (பிப்‌.12) நடைபெற்றது.

பவானியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (பிப்‌.12) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் பவானி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட பழைய பஞ்சாயத்து ஆபீஸ் ரோடு,மேற்கு தெரு பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய்க்கான சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வதின் அவசியம், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய் ஒழிப்பில் பொது மக்களின் பங்கு குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் லோகேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், சுதன் சர்மா, பவானி நகர்மன்ற உறுப்பினர்கள் ரஷியா பேகம், சரவணன், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் தரணிதரன், காசநோய் சுகாதாரப் பார்வையாளர் புவனேஸ்வரி, நடமாடும் மருத்துவ குழுவினர், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 100 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story