கம்பியால் தாக்கி காவலாளியை கொன்ற தொழிலாளி கைது!

கம்பியால் தாக்கி காவலாளியை கொன்ற தொழிலாளி கைது!
X
காவலாளியை கம்பியால் அடித்து கொலை செய்த தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு : ஈரோட்டை சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் அரச்சலூர் அடுத்த பழைய பாளையம் அருகே உள்ள கரியங்காட்டு தோட்டம் பகுதியில் கான்கிரீட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருடைய தொழிற்சாலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 13 பேர் தொழிலாளிகளாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையின் இரவு காவலாளியாக அரச்சலூர் அடுத்த அஞ்சுராம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (64) என்பவர் வேலை செய்து வந்தார்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பழனிச்சாமி காவல் பணிக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று காலை அவர் முகம் சிதைந்த நிலையில் தொழிற்சாலை வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதைக் கண்டு அங்கு இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கண்டுபிடிக்கவில்லை. தடையவியல் நிபுணர்களும் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

Tags

Next Story