நம்பியூர் அருகே மனுநீதி நாள் முகாமில் 86 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
![நம்பியூர் அருகே மனுநீதி நாள் முகாமில் 86 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர் நம்பியூர் அருகே மனுநீதி நாள் முகாமில் 86 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்](https://www.nativenews.in/h-upload/2025/02/12/1977082-picsart25-02-1214-51-21-373.webp)
நம்பியூர் அருகே கெட்டிச்செவியூர் தான்தோன்றி அம்மன் கோயில் வளாகத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்த படம். உடன் கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம் உள்ளனர்.
நம்பியூர் அருகே கெட்டிச்செவியூர், தான்தோன்றி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 86 பயனாளிகளுக்கு ரூ.14.48 லட்சம் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் சாந்திபாளையம் கிராமம் கெட்டிச்செவியூர், தான்தோன்றி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ராஜம்மாள் திருமண மண்டபத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று (பிப்.12) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி 86 பயனாளிகளுக்கு ரூ.14.48 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 11 நபர்களுக்கு கல்வி, இயற்கை மரண உதவித்தொகை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 56 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
தொடர்ந்து,தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 18 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு விதை ( எண்ணெய் வித்து, கலப்பை, தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 2 நபர்களுக்கு தென்னை பரப்பு விரிவாக்கம், மானியத்துடன் கூடிய சுழற்கலப்பை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 நபர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், தையல் இயந்திரம், காதொலி கருவி என மொத்தம் 86 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 48 ஆயிரத்து 874 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
முன்னதாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், கால்நடைத் துறை, வேளாண்மை உழவர் நலத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மகளிர் சுய உதவிக்குழு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற அவர் இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இம்முகாமில் கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், வேளாண்மை இணை இயக்குநர் மீ.தமிழ்செல்வி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எஸ்.பாஸ்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சி.லோகநாதன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அருணா, துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கோதை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜ கோபால், நம்பியூர் வட்டாட்சியர் ஜாஹீர் உசேன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu