Begin typing your search above and press return to search.
படுகர் இனமக்கள் பாரம்பரிய நடனத்துடன் தேர்திருவிழா
படுகர் இன மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளோடு நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள ஒசட்டி என்ற கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜடேருத்ரா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்த் திருவிழாவில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி படுகர் இன மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்தபடி நடனமாடி வழிபாடு நடத்தினர். படுகர் இன மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளோடு நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.