திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
அரசு மதுபான கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்னை நகர், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், தங்களது பகுதியில் புதியதாக மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, இரு தினங்களுக்கு முன்பு கொட்டும் மழையில் குட்டத்துப்பட்டி பகுதி வழியாகச் சென்ற அரசு பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது வரை மதுபானக் கடை பணிகளை நிறுத்துவதற்கு எந்த ஒரு அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள், குழந்தைகள் என 50 க்கும் மேற்பட்ட கிராமத்தினர், எங்களது பகுதியில் மதுக்கடை தேவை இல்லை என்று கூறி கோஷங்கள் எழுப்பி இன்று போராட்டம் நடத்தினர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.