மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்ற திண்டுக்கல் வீரர்கள்
பதக்கம் வென்ற வீரர்கள் வீராங்கனைகளை திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டினார்
HIGHLIGHTS
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆறுமுகம் காசிராஜன் பயிற்சி மையத்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஜூனியர் பிரிவில் தினேஷ், அஸ்வினி, சௌந்தர்யா ஆகியோர் தங்கம் வென்றனர். மீனா சாலம் பிரிஜித், ஆகாஷ் ஆகியோர் வென்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்கள் வீராங்கனைகளை திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டினார்.
இதுகுறித்து வெற்றி பெற்றவர்கள் கூறுகையில், நாங்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளோம். ஆறுமுகம் காசிராஜன் பயிற்சி மையத்தில் பெற்ற பயிற்சி மூலம் இந்த சாதனை படைத்துள்ளோம். இதைத்தொடர்ந்து தேசிய அளவிலும் உலக அளவிலும் நடக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று சாதனைகளை குவிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு தகுந்த பயிற்சியும் முயற்சியும் எடுக்க உள்ளதாகவும் கூறினர்.