/* */

கூட்டநெரிசலில் தொற்று பரவும் அபாயம்: பேருந்துகளை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல்லில் கூட்டநெரிசல் காரணமாக தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பேருந்துகளை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கூட்டநெரிசலில் தொற்று பரவும் அபாயம்: பேருந்துகளை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை
X

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் பேருந்துகள்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சொந்த ஊர்களுக்குச் சென்று இன்று பணி நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்ல ஏராளமானோர் திண்டுகல் பேருந்து நிலையத்தில் கூடினர்.

அங்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் சென்னை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்வதற்கு போதிய பேருந்துகள் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஒரே பேருந்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிப்பதாகவும், இதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே விடுமுறை முடிந்து பணி நிமித்தமாக செல்லக்கூடிய பொதுமக்களின் நிலை கருதி, பேருந்துகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 17 Jan 2022 9:23 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!