திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை.பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி.
HIGHLIGHTS
திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து திண்டுக்கல் பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் மழை எதுவும் பெய்யவில்லை. இந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் திடீரென்று கருமேகங்கள் சூழ பலத்த காற்று வீச துவங்கியது. பின்னர் பெய்ர மழை ஒரு மணி நேரம் வெழுத்து வாங்கியது.
நகரில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் எங்கும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. கன மழையை எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு ஒரு மணி நேரம் வரை மட்டும் பெய்த மழையால் ஏமாற்றம் இருந்தாலும் அனைத்து பகுதிகளும் குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலை பகுதிகளான சிறுமலை தாண்டிக்குடி ஆடலூர் பன்றிமலை போன்ற மலை பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நகர் பகுதியில் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.