/* */

திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை.பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி.

HIGHLIGHTS

திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து திண்டுக்கல் பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் மழை எதுவும் பெய்யவில்லை. இந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் திடீரென்று கருமேகங்கள் சூழ பலத்த காற்று வீச துவங்கியது. பின்னர் பெய்ர மழை ஒரு மணி நேரம் வெழுத்து வாங்கியது.

நகரில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் எங்கும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. கன மழையை எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு ஒரு மணி நேரம் வரை மட்டும் பெய்த மழையால் ஏமாற்றம் இருந்தாலும் அனைத்து பகுதிகளும் குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மலை பகுதிகளான சிறுமலை தாண்டிக்குடி ஆடலூர் பன்றிமலை போன்ற மலை பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நகர் பகுதியில் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 2 Sep 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  2. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  4. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  6. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  8. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  9. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  10. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை