Begin typing your search above and press return to search.
ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும் :மாநகராட்சி ஆணையர் உத்தரவு
கட்டட உரிமையாளர்கள் மக்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாத வகையில் அனுமதி பெற்ற கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க வேண்டுமென மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இதுகுறித்து ஆணையர் மேலும் தெரிவித்ததாவது : திண்டுக்கல் மாநகராட்சி எல்லைப் பகுதிக்குள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள் பயன்பாட்டில் உள்ளது. இக்கட்டடங்கள் இயற்கை சீற்றம், ஸ்திரத்தன்மை இன்மையாலோ இடிந்து விழுந்து உயிர்ச் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது வரை 52 அறிவிப்புகள் வழங்கி இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே கட்டிட உரிமையாளர்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கும், தங்களுக்கும் எவ்வித இழப்பும் ஏற்படாத வகையில் அனுமதி பெற்ற கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.