கோரிக்கை பேஜ் அணிந்து மருத்துவர்கள் பணி
திண்டுக்கல்லில் அரசு மருத்துவர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை பேஜ் அணிந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் வேறுபாடின்றி கால முறை ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க கோரியும், அரசு சேவை மருத்துவர்களுக்கு முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் சிறப்பு மருத்துவத்தில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,
4(D)2 அரசாணை குளறுபடிகளை நீக்கி நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியும், அரசு மருத்துவர்களுக்கு நியாயமான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு உன்னுடைய நடத்தக்கோரி உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தாங்கள் வேலை பார்க்கும் மருத்துவமனைகளில் கோரிக்கை பேஜ் அணிந்து தங்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் செந்தில்குமார் கூறுகையில் எங்களது 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை கோரிக்கை பேஜ் அணிந்து வரும் நோயாளிகளுக்கு நாங்கள் மருத்துவம் பார்த்து வருகிறோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டமாக வரும் 28ஆம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.