Begin typing your search above and press return to search.
நிர்வாகிகள் தேர்விற்க்கு விருப்பமனு வழங்கிய பாமகவினர்
தர்மபுரியில் விருப்ப மனு பெறுதல் மற்றும் மாவட்ட ஆலோசனை கூட்டம் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
HIGHLIGHTS
தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட அனைத்து நிலை புதிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள், செயலாளர்கள் தேர்விற்கு விருப்ப மனு பெறுதல் மற்றும் மாவட்ட ஆலோசனை கூட்டம் தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில், தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், பென்னாகரம் எம்எல்ஏவுமான ஜி.கே.மணி கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.
கட்சியின் தலைமை அறிவித்துள்ள குழு பொறுப்பாளர்களான இசக்கிபடையாட்சி, ஆலயமணி அரசாங்கம், கரூர் பாஸ்கர் மயிலாடுதுறை ஐயப்பன் ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றார்கள்.
இந்நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள் நம்பிராஜன், பாரிமோகன், செல்வகுமார், சின்னசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.