தர்மபுரி அருகே கோமாரி தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ துவக்கி வைப்பு
தர்மபுரி அருகே கோடாரி தடுப்பூசி முகாம் எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
தர்மபுரி அருகே கோடாரி தடுப்பூசி முகாமை எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், டொக்குபோதனஅள்ளி ஊராட்சி, பூவல்மடுவு கிராமத்தில் 01.12.2021 புதன்கிழமை, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாமை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, முகாமை தொடங்கி வைத்து, கால்நடை வளர்க்கும் விவசாயிகள், கால்நடை இறப்பை தடுக்க தவறாமல் இம்முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, கால்நடைகள் வளர்போரிடம் கால்நடைகளுக்கான தாது உப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உடன், முன்னாள் பாமக மாவட்ட செயலாளர் பெ.பெரியசாமி, ஒன்றிய செயலாளர் வ.அறிவு, முத்து, அர்ஜீனன், சித்ராகுமார், முருகன், ராணிசுப்ரமணி, சேட்டு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.