Begin typing your search above and press return to search.
பேனர்கள் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி: தர்மபுரி கலெக்டர் அதிரடி
தர்மபுரி மாவட்டத்தில் பேனர்கள் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ச.திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் திருவிழாக்கள், பண்டிகைகள், திருமண,துக்க நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், கட்சி விளம்பரங்கள் , வியாபார ரீதியில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள்,விளம்பர பலகைகள்; வைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றிருக்கவேண்டும்.
அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் ஆகியவற்றை வரும் 8ம் தேதிக்குள் தாமாக அகற்றிக்கொள்ள சம்மந்தப்பட்டவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு அகற்றிக்கொள்ளாதவர்கள் மீது காவல் துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.