Begin typing your search above and press return to search.
தர்மபுரி அருகே பெண் குழந்தை மர்ம சாவு; போலீசார் விசாரணை
தர்மபுரி அருகே பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏரி கோடி பட்டியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 25 ). இவரது மனைவி சாலம்மாள் வயது 21. இவர்களுக்கு இதழினி என்ற 9 மாத பெண் குழந்தை இருந்தது. நேற்று இரவு இக்குழந்தைக்கு சளி இருந்ததாக கூறப்படுகிறது.
இக்குழந்தையை தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கூறியதால் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டது என்று தெரிவித்தனர். இதனையடுத்து சுகுமார், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்