தருமபுரியில் தேங்கியுள்ள மழைநீர்: பொதுமக்கள் அவதி.
தருமபுரியில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
HIGHLIGHTS
தருமபுரியில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ஏ.ஜெட்டி அள்ளி, ராயல்நகரில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தருமபுரி, சேலம் நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில், இதன் பிரதான நுழைவு சாலை உள்ளதால், நெடுஞ்சாலையிலிருந்து மழை நீர் வடிகால் வசதியில்லாததால் இந்தக் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்துவிடுகிறது.
அதே போன்று நேற்று முன்தினம் முதல் பெய்த மழையால், ராயல் நகர் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த மழைநீர் தேங்கியுள்ள இடத்தில் அஞ்சல அலுவலகம் அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அஞ்சல் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் அவுதியுற்று வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.