தர்மபுரி பெரியார் பல்கலை., முதுநிலை விரிவாக்க மையத்தில் சிறப்பு கருத்தரங்கம்
தர்மபுரி பெரியார் பல்கலை முதுநிலை விரிவாக்க மையத்தில் ஆங்கில துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தர்மபுரி பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் ஆங்கில துறையின் சார்பில் ஆங்கில இலக்கிய மன்றம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் வாழ்தல் மற்றும் சிந்தித்தல் எனும் தலைப்பில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கு பெரியார் முதுநிலை விரிவாக்க மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். மாணவர் முகமது சபீர் அனைவரையும் வரவேற்றார். ஆங்கில துறை இணை பேராசிரியர் துறை தலைவர் சி.கோவிந்தராஜ், உதவி பேராசிரியர் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி ஆங்கில துறை பேராசிரியர் முனைவர் பிரேம் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் ஆங்கில எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் ஆய்வு மேற்கொள்ள தக்க வழிமுறைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்களின் வினாடி வினா போட்டி,குழு விவாத போட்டி,ஊமை நாடகம், கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னாதாக இரண்டாம் ஆண்டு மாணவன் சக்திவேல் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார் .மாணவி நந்தினி நன்றி கூறினார்.