/* */

தருமபுரியில் தடுப்பூசி திருவிழா: கலெக்டர் தொடங்கி வைத்தார்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகிறது.

HIGHLIGHTS

தருமபுரியில் தடுப்பூசி திருவிழா: கலெக்டர் தொடங்கி வைத்தார்
X

தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. இதற்காக மாவட்டம்தோறும் சிறப்பு முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் முககவசம் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது. மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

பெருகி வரும் கொரோனா தொற்றை தடுக்க பிரதமர் மோடி தடுப்பூசி திருவிழாவை நடத்துவதற்கு உத்தரவிட்டார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழாவை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா தொடங்கி வைத்தார். இதில் 45 வயதுக்கு மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.

Updated On: 14 April 2021 3:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?