தர்மபுரியில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
75 வது சுதந்திர தின விழாவில் கலெக்டர் திவ்யதர்ஷினி கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நாட்டின் 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார். அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்கள் வானில் பறக்க விடப்பட்டன. திறந்த வாகனத்தில் சென்று காவல்துறை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.52.53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் சேவையாற்றிய பல்வேறு துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், கூடுதல் ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.