பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: தருமபுரி கலெக்டர் தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் பத்ம விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
இது குறித்து, தருமபுரி கலெக்டர் வெளியிட்ட அறிக்கை: மேண்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசு பத்ம விருதுகளை (பத்மவிபுஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ) அறிவித்து வருகிறது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில் நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு, வரும் 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட உள்ளது. எதிர்வரும் 2022ஆம் ஆண்டு குடியரசுதின விழாவின்போது இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படும். இவ்விருதுகள் தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை www.padmaawards.gov.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். எனவே தகுதியுள்ளவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.