Begin typing your search above and press return to search.
தர்மபுரியில் குழந்தை திருமணம்: மாப்பிள்ளை , பெற்றோர் உள்பட 5 பேர் கைது
தர்மபுரி அருகே குழந்தை திருமணம் மாப்பிள்ளை , பெற்றோர்கள் உள்பட 5 பேர் கைது
HIGHLIGHTS
தர்மபுரி அடுத்த குப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சர்ச்சின் (வயது 23). கட்டிட மேஸ்திரி. இவருக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கே.பி. நகரை சேர்ந்த பிளஸ் டூ படிக்கும், 16 வயது மாணவிக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது.
இவர்களுக்கு, தர்மபுரி அடுத்த தொப்பூர் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தர்மபுரி மாவட்ட சமூகநல அலுவலர் ஜோதிமணி விசாரணை நடத்தினர் . இதையடுத்து குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து குழந்தை திருமணம் செய்ய முயற்சித்த மாப்பிள்ளை சச்சின் மற்றும் மாப்பிள்ளையின் தந்தை மணி, தாய் வள்ளி, சிறுமியின் பெற்றோர் என, 5 பேர் மீதும் தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.