Begin typing your search above and press return to search.
கடலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டத்தில் 4 நாட்களாக பெய்த கன மழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்தது. ஆனால் நேற்று தீபாவளி அன்று காலை வானம் மேக மூட்டத்தடன் இருந்தாலும் பின் வெயில் அடிக்க தொடங்கியது.
இந்நிலையில் நனைந்த சுவரின் ஈரப்பதம் தாங்காமல் கடலூர் அடுத்த தென்னம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் சங்கர் என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் காவல் துறையினர் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகினறனர். சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.