Begin typing your search above and press return to search.
கடலூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் அதிரடி சோதனை
கடலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் இன்று பல்வேறு இடங்களில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொடர்பான சட்ட ஒழுங்குப் பிரச்சினை குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த வாகன தணிக்கையின் போது தனியார் சொகுசு பேருந்துகள், டூரிஸ்ட் கேப் சரக்கு வாகனம் போன்ற வாகனங்கள் உரிமம், இன்சூரன்ஸ்,போன்றவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இன்று ஒரே நாளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆய்வில் கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பி, பண்ருட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன்,நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ் உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.