Begin typing your search above and press return to search.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறித்து முகநூலில் கொலை மிரட்டல் விடுத்து அவதூறாக பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் நகர தி.மு.க. செயலாளர் கே.எஸ். ராஜா நேற்று கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
புகாரின் அடிப்படையில் கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து முகநூலில் பதிவிட்ட பதிவினை ஆதாரத்துடன் கைப்பற்றிய காவல் துறையினர், முரளிகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். முரளி கிருஷ்ணன் தி.மு.க.வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது