குடும்பத்தகராறு காரணமாக கடலூர் மத்திய சிறை காவலர் தூக்கிட்டு தற்கொலை
கடலூர் மத்திய சிறைச்சாலையில் பணி புரிந்த முதல் நிலை காவலர் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரிய காட்டுசாகை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்,இவருக்கு திருமணமாகி இந்து என்ற மனைவியும் மூன்று வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. 2011 ஆம் ஆண்டு சிறை காவலராக பணியில் சேர்ந்து கடலூர் மத்திய சிறையில் சிற்றுண்டி அங்காடியில் பணியாற்றி வருகிறார்.
அங்காடியில் பொருட்களை வாங்கி வைப்பதற்காக மனைவி நகைகளை அடகு வைத்ததாகவும் இதனால் கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது, நேற்று இரவு காவலர் குடியிருப்பில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,
சிறைத்துறை டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் கடலூர் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது ஆயுள் தண்டனை கைதி அன்பழகன் தற்கொலைக்கு முயற்சித்து கடலூர் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் முதல்நிலைக் காவலர் செல்வகுமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிறைக்காவலர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.