/* */

மண்ணிவாக்கம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலி

ஆட்டோ மீது கார் மோதி ஆட்டோ ஓட்டுநர் இறந்துபோனார்.

HIGHLIGHTS

மண்ணிவாக்கம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலி
X

விபத்து நடந்த இடம்.


மண்ணிவாக்கம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில், மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த ஆட்டோ ஓட்டுனர் பரிதாபமாக பலியானார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன்(35), ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு வண்டலூர் - மீஞ்சூர் புறவழிச்சாலையில், ஓட்டேரி காவல் நிலையம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது வண்டலூரில் இருந்து மீஞ்சூர் மார்க்கமாக வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோவின் மீது வேகமாக மோதியது. ஆட்டோவிலிருந்து முருகன் தூக்கி வீசப்பட்டதில், மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஆவடி பகுதியை சேர்ந்த கரன்(20), என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பி.இ.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தந்தையின் காரில் அவரது நண்பர்களான தர்ஷன் பிரசாத் (20), நிதின் (20), ஆஸ்டின் (20), சுனில் குமார் (20) ஆகியோருடன் வண்டலூர் பகுதிக்கு வந்து, பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 5 பேரும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.

Updated On: 13 March 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  2. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  3. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  5. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  6. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!
  7. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  8. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  9. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!