/* */

முன்னாள் பாமக நகர தலைவருக்கு வெட்டு

முன்பகை காரணமாக செங்கல்பட்டில் முன்னாள் பாமக நகர தலைவருக்கு அரிவாள் வெட்டு. மருத்துவமனையில் அனுமதி

HIGHLIGHTS

முன்னாள் பாமக நகர தலைவருக்கு வெட்டு
X

செங்கல்பட்டு ராமபாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்யா.இவர் பாமகவில் நகர தலைவராக இருந்துள்ளார். தற்போது சிட்லபாக்கம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் செங்கல்பட்டு பகுதியில் பன்றி வளர்த்து வந்துள்ளார். பன்றிகளை பண்ணையில் வளர்க்காமல் பொதுவெளியில் பன்றிகளை மேய விடுவதும் அவை வளர்ந்த பின் அதை விற்றும் வந்தார்.

இந்நிலையில் படப்பை பகுதியில் அதிகளவு பன்றிகள் இருப்பதைப் பார்த்த சத்யா அவற்றையும் பிடித்து விற்று வந்துள்ளார். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சிலருடன் முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று தன்னுடைய வீட்டின் வெளியேஇருக்கும்போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை மடக்கி அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சத்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து முன் பகையின் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 April 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...