6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் முதலமைச்சருக்கு மனு
செங்கல்பட்டில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் முதலமைச்சருக்கு மனு அளித்தனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு இந்து மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் அக்கட்சியினர் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சருக்கு மனு அளித்தனர்.
இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், சமீபத்தில் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை மோசமாகப் பேசியதோடு, பிற மதத்தினர் குறித்து வெறுப்பை விளைவிக்கும் கருத்துக்களையும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலிசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
அவர் கைது செய்யப்பட்டலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று அவர் தலைமறைவானார். அவரைப் பிடிப்பதற்கு ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவரது செல்போனை வைத்து அவரை காவல்துறையினர் தேடினர். முடிவில் அவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடியில் தங்கியருப்பது தெரியவந்தது. அங்கு அவரைக் கைது செய்த காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மதவெறியோடு பேசியதாக கைது செய்யப்பட்ட மத போதகர் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், கொரோனா தடுப்பூசியினை தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக போட வேண்டும், ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவதற்கு இலவசமாக தானியத்தை தர வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கல்பட்டு ஆட்சியர் மூலமாக அவரது அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை அளித்துள்ளதாக தெரிவித்தார்.