Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டில் எலும்புக்கூடான மின் கம்பங்கள்; அப்பகுதி மக்கள் அச்சம்
செங்கல்பட்டு அருகே, எலும்புக்கூடான மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் அருகே உள்ளது கரும்பாக்கம் ஊராட்சி. குருவன்மேடு-கரும்பாக்கம் சாலையில், பல பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் உள்ள கம்பங்களும், சாலையோரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கின்றன.
இதேபோல், இப்பகுதியில் பள்ளி அருகேயும், நான்கு மின்கம்பங்கள் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து எலும்புக் கூடாக காட்சியளிக்கின்றன. அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மரண பீதியில் சென்று வருகின்றனர்.
எனவே, அசம்பாவிதம் நிகழும் முன், சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.