/* */

செங்கல்பட்டில் எலும்புக்கூடான மின் கம்பங்கள்; அப்பகுதி மக்கள் அச்சம்

செங்கல்பட்டு அருகே, எலும்புக்கூடான மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் எலும்புக்கூடான மின் கம்பங்கள்; அப்பகுதி மக்கள் அச்சம்
X

எலும்புக்கூடான மின் கம்பங்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் அருகே உள்ளது கரும்பாக்கம் ஊராட்சி. குருவன்மேடு-கரும்பாக்கம் சாலையில், பல பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் உள்ள கம்பங்களும், சாலையோரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கின்றன.

இதேபோல், இப்பகுதியில் பள்ளி அருகேயும், நான்கு மின்கம்பங்கள் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து எலும்புக் கூடாக காட்சியளிக்கின்றன. அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மரண பீதியில் சென்று வருகின்றனர்.

எனவே, அசம்பாவிதம் நிகழும் முன், சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 1 Aug 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!